மட்டக்குளிய – சமித்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இவரைக் கைது செய்ய கொழும்பு குற்றப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
நேற்று இரவு 07.30 அளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
மேலும், இதனால் காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.