மட்டக்குளிய துப்பாக்கிச்சூடு மேலும் இருவர் கைது..

மட்டக்குளிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மேலும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று(27) இரவு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று(28) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட உள்ளனர்.

இதேவேளை அண்மையில் இரத்தினபுரி பிரதேசதத்தில் வைத்து சம்பத்துடன் தொடர்புடைய குடு ரொஷான் உள்ளிட்ட 11 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.