மதுபோதையில் வாகனம் செலுத்திய 3879 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(18) காலை 06 மணி முதல் இன்று(19) காலை 06 மணி வரையான 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 177 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 05ம் திகதி மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து 3879 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.