(FASTGOSSIP| COLOMBO) – மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதாகிய மேலும் இருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று(08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
மொஹமட் நசீம் மொஹமட் பைசர் மற்றும் மொஹமட் ஜபீர் மொஹமட் முபா ஆகியோரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.