மத்திய மாகாணத்தில் இன்று(28) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) தீர்மானித்துள்ளது.
இதற்கமைய குறித்த மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் நான்கு மணித்தியாலங்கள் இந்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, அச்சங்கத்தின் உதவி செயலாளர் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.
சைட்டம் நிறுவனம் தொடர்பில் அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.