ஊழியர் சேமலாப நிதியத்தின் மூலம், மத்திய வங்கி மேற்கொண்ட நிதிப்பரிமாற்றம் தொடர்பில் உள்ளக விசாரணை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் அண்மையில் வெளிவந்த பல ஊடக அறிக்கைகளை கருத்திற் கொண்டே மேற்குறித்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மத்திய வங்கி ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
