சர்ச்சைக்கு உள்ளான திரைசேரிமுறிகள் தொடர்பான விவகாரம் உட்பட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக மத்திய வங்கியின் நிதி சபையின் ஊடாக விஷேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதன்மை தரகு நிறுவனங்கள் உட்பட்ட தரப்பினர்கள் இது தொடர்பாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கியின் திரைசேரிமுறிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நியாயமாக நடத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த விஷேட கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.