மத்திய வங்கி ஆளுநர் குறித்த இறுதித் தீர்மானம் இன்று

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் குற்­றம் ­சாட்­டப்­பட்­டுள்ள ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் குறித்தான கணக்­காய்வு திணைக்­க­ளத்தின் அறிக்கை இன்று கோப் குழு­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள­து.

அத்­துடன் குறித்த விசா­ரணை மீதான அடுத்த கட்ட  நகர்­வுகள் குறித்து இன்­றைய தினமே தீர்மானிக்கப்படும்.

ஒரு­வேளை இந்த விசா­ர­ணையின் இறுதி முடிவு இன்­றைய தினம் எடுக்க கூடும் என கோப் குழுவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுனில் ஹந்­துன்­நெத்தி தெரி­வித்தார் .இலங்கை மத்­திய வங்கி பிணை முறி விவ­காரம் தொடர்பில் வின­விய போதே கேச­ரிக்கு அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறியை ஆளுநர் அர்­ஜூன மகேந்­திரன் தன்­னு­டைய உறவினருக்கு வழங்­கி­யமை தொடர்பில் பெரும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன . இதன்­படி ஆளுநர் அர்­ஜூன மகேந்­தி­ரனை உட­ன­டி­யாக பதவி வில­கு­மாறு எதி­ர­ணி­யினர் போராட்­டங்­களை நடத்­திய வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். இதன்­படி இது தொடர்பில் கணக்­காய்வு திணைக்­க­ளத்­தினால் தீவிர விசாரணை மேற்­கொள்­ளப்­பட்டது. குறித்த விசா­ர­ணை­களின் பிர­காரம் மத்­திய வங்­கியில் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­னவா என்­பது தொடர்­பி­லான அறிக்கை முழு­மை­யாக பூர்த்­தி­யாகி உள்­ளது .