மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சி கோரியிருந்தது.
குறித்த இந்தக் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 27ம் திகதி விவாதம் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.