மந்த போசனத்தினால் குழந்தை இறந்த சம்பவம் தொடர்பில் ஐந்து அரச அதிகாரிகளின் பதவிக்கு தடை

(FASTNEWS | COLOMBO) – திஸ்ஸமகாரம பிரதேசத்தில் 11 மாத குழந்தை ஒன்று மந்த போசனத்தினால் இறந்த சம்பவம் தொடர்பில் ஐந்து அரச அதிகாரிகளின் பதவியைத் தடை செய்யுமாறு, ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி உத்தரவிட்டுள்ளார்.

திஸ்ஸமகாரம, ஜியாஜபுர பிரதேசத்தைச் சேர்ந்த மலித் வீரசிங்க எனும் 11 மாதக் குழந்தையே கடந்த மே மாதம் 14ஆம் திகதி இவ்வாறு மந்த போசனத்தினால் உயிரிழந்துள்ளார். இக்குழந்தைக்கு மேலும் மூன்று சகோதரர்கள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.