மனமுடைந்த ASP லியனகே தனது தூதுவர் பதவியை இராஜினாமா செய்தார்…

கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றி வந்த ஏ.எஸ்.பி.லியனகே குறித்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

குறித்த தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்,

தனக்கு ஆளுநர் பதவி வழங்கவுள்ள காரணத்தினால் தான் தூதுவர் பதவியினை இராஜினாமா செய்வதாகவும், தனக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித மனக்கசப்புக்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.