சம்பூர் மின் திட்டம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை சம்பந்தமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
கிழக்கு மக்களின் குரல் அமைப்புடன் இணைந்து இந்த முறைப்பாட்டை மேற்கொள்ள உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.
மேலும், இதன்போது ஜே.வி.பியின் அரசியற்குழு உறுப்பினரான கே.டி. லால்காந்த கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இந்தத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.