மன்னார் – கிரேண்பசார் பகுதியில் அமைந்துள்ள மின்சார உபகரண வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்றிரவு(12) திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
காவல்துறை மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதுடன், குறித்த விற்பனை நிலையத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்சாதனப்பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீப்பரவல் தொடர்பில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.