நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை வர்த்தக சங்கம் தெரிவிக்கின்றது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 1Kg தக்காளி 220 ரூபாவாகவும் 1Kg பச்சை மிளகாய் 350 ரூபா முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும், புடலங்காய் 100 ரூபா முதல் 160 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் காலங்களில் மரக்கறிகளின் விலைகள் குறையக்கூடும் எனவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.