மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு

(FASTNEWS|COLOMBO) – மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்த குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, தீபாளி விஜேசுந்தர, ஜனக் த சில்வா, அச்சல வெங்களப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் குறித்த குழுவின் உறுப்பினர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.