மரண தண்டனையினை அமுல்படுத்துவதே சிறந்தது – ஜனாதிபதி

நாட்டில் மது போதையும், குளிசையும் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய தண்டனையாய் மரண தண்டனையினை தான் விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேஷ மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றுகையில்;

இதுகுறித்து பொது மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து முடிவொன்றினை எட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.