மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையான பாலம் மற்றும் புகையிரத வீதியினை திட்டமிடுவதற்கான குறித்த ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மருதானை புகையிரத நிலையத்திலிருந்து மாளிகாவத்தை வரையில் மேலும் 04 வீதிகளை அமைப்பதற்கும், அதற்காக மாளிகாவத்தை பாடசாலை ஒழுங்கை பாலம் மற்றும் மருதானை பயணிகள் பாலம் என்பவற்றை விஸ்தரிப்பதற்குமான ஆலோசனை சேவைகளை புகையிரத திணைக்களத்தின் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(rizmira)