மருத்துவ சங்கங்களின் தேவைக்கேற்ப நியமனம் வழங்க முடியாது

மருத்துவ சங்கங்கள் அல்லது தாதியர் சங்கங்களுக்கு தேவையான விதத்தில் மருத்துவ மற்றும் தாதி நியமனங்களை பெற்று கொடுக்க தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மருத்துவ நியமன பட்டியலை அடிப்படையாக கொண்டு அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடளாவிய ரீதியான அடையாள சேவைப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.