மருந்து வியாபார நடவடிக்கையில் போராடுவது இலகுவான விடயம் அல்ல என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார்.
மருந்து கொள்கையின் ஊடாக மருந்துகளின் விலைகளை அதிகளவில் குறைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
எந்தவித சவால்களுக்கும் முகங்கொடுத்து மருந்து விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.