கொலன்னாவை பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த மூன்று பெண்களில் இரு பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சரணடைந்தவர்களில் ஒருவர் 19 வயதுடைய வத்சலா பெரேரா எனவும் மற்றையவர் அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரியெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இவர்களுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை காணாமல் போய் மீண்டும் வராத 14 வயதான தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(rizmira)