மர்மமுறையில் மின்மாற்றியில் மீள் தீ

பம்பலபிட்டிய – லோரிஸ் வீதி பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றியில் இன்று(29) காலை திடீரென தீப்பிடித்துள்ளது.

தீயணைப்பு வாகனம் இரண்டு அந்த இடத்திற்கு அனுப்பட்ட போதிலும் அந்நேரத்தில் பிரதேச மக்கள் தீயை அணைத்துள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.