(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று பிரதமர் கூறியதாக வெளிவந்த செய்தியை பிரதமர் அலுவலகம் முற்றாக மறுத்திருக்கிறது.
இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தில் கல்வி, சுகாதாரத்தை தவிர்ந்த சகல அமைச்சுகளுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.