இலங்கை அணியானது இம்முறை உலகக் கிண்ணத்தினை வெல்லுவது தொடர்பிலான செய்திகளும் கருத்துக்களும் சமூக வலைதளங்கள் ஊடாக பரவி வருகின்றமை யாவரும் அறிந்ததே..
அந்த வகையில், மலிங்காவின் பந்துவீச்சு தாக்குதல்கள் அவரது மனைவியான தான்யா பெரேராவின் சமூக வலைதளங்களின் தாக்குதல்களால் பின்தொடர்ந்து வருகின்றதாகவும், இதனால் எதிரணி வீரர்களைத் தோற்கடிப்பதில் மாலிங்க மனைவியுடன் களத்தில் இணைந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இலங்கை அணியின் சக வீரரான திசர பெரராவினை சாடி தொடர்சியாக பதிவுகளை வெளியிட்டு வந்த தான்யா பெரேரா, தற்போது திசரவின் மனைவியான செராமி பெரேராவுடனும் தர்க்கரீதியான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.