மலேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகிய நிலநடுக்கம்

மலேசியாவின் பொர்னியோ தீவில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது.

இதில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய சிகரமாக கருதப்படும் மலேசியாவின் கின்பாலு சிகரப் பகுதியில் இருந்த 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 8 பேர் மாயமாகி இருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இரண்டு பேர் யார் என அடையாளம் காண முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

காணமல் போன எஞ்சிய உயிர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது