மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை கோமாளி போல சித்தரித்த பிரபல ஓவியர் பாஹ்மி ரேசாவிற்கு ஒரு மாத சிறைத்தண்டனையும், 7 ஆயிரத்து 700 டாலர் (சுமார் ரூ.5 லட்சம்) அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மலேசியா பிரதமரை கோமாளியாக சித்தரித்து பிரபல ஓவியர் பாஹ்மி ரேசா கேலிச்சித்திரத்தை இணையதளத்தில் வெளியிட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

