மலேஷிய எயார் லைனுக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்று , அவுஸ்திரேலியாவின் மெல்போன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்னில் இருந்து கோலாலம்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த எம்.எச்148 விமானமே புறப்பட்டு சில நிமிடங்களில் மீண்டு இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
இயந்திரக் கோளாரே இதற்குக் காரணம் என வெளிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சுமார் 300 பயணிகளுடன் சென்ற குறித்த விமானம் வெள்ளிக்கிழமை பத்திரமாக மெல்போன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக, விமான நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.