மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடித்தால், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படக் கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, அம்பகமுவ முதலான பிரதேசங்களிலும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி குருவிட்ட, எஹலியகொட முதலான பகுதிகளிலும் மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.