நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்குமாயின், நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடுமென, தேசிய கட்டட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, குறித்த மையத்தினால் நுவரெலியா, மாத்தளை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.