மழையுடனான காலநிலை தொடர்ந்து நீடிக்கும்…

நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களிலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் மேல், வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.