மஹனாம மற்றும் திசாநாயக்க ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு…

ஜனாதிபதி செயலனியின் பிரதானி எல்.கே மஹனாம மற்றும் மரக் கூட்டுத்தாபன தலைவர் பி . திசாநாயக்க ஆகியோரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று(13) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்களால் 10 பில்லியன் ரூபா இலஞ்சமாக கோரப்பட்டிருந்த நிலையில், அதில் முற்பணமாக 2 பில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளும் போதே மஹாநாம மற்றும் திசாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma