இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்ற வேளையில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச – மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.
கந்தளாய் சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பங்கினை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு கைமாற்றுவதற்காக, குறித்த நிறுவனத்திடம் இருந்து 54 கோடி ரூபாய்களை அவர்கள் இலஞ்சமாக கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.