மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு பிணை மறுப்பு…

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோருக்கு இன்று(26) பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேக நபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்த போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.