மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு எதிராக நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு

(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று(19) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே. மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திஸாநாயக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட இருவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் திகதி பிணையில் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.