மஹிந்தவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூடுகிறது…

ஒன்றிணைந்த எதிர்கட்சி தலைவர்களுடன் இன்று(28) மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, எதிர்வரும் 05ம் திகதி நல்லாட்சி அரசுக்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் எதிர்ப்பு போராட்டம் குறித்து ஆராயப்பட உள்ளது.

மேலும், தாமதமாகும் தேர்தல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.