மஹிந்தவின் தேர்தல் பேருந்துக்கு 425 இலட்சம் செலவு

மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்க பேருந்துகளை பயன்படுத்தியுள்ளார்.

இதனால் அரசாங்க பேருந்து திணைக்களத்துக்கு ஆயிரத்து 425 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மகிந்தவால் ஏற்படுத்தப்பட்ட நட்டத் தொகை சட்ட ரீதியாக மீளப்பெறப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.