மஹிந்தானந்தவின் வழக்கு விசாரணை மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோனிடம்….

கடந்த அரசில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ இன்று(09)உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கில் இருந்து, நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்கி வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க கடந்த வழக்கின் போது மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற பிரதான நீதிபதி ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அது மேலதிக விசாரணைக்காக நீதிபதி விக்கும் களுஆராச்சியிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், இந்த வழக்கினை விசாரணை செய்ய நீதிபதி விக்கும் களுஆராச்சி அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

இதனால் குறித்த வழக்கினை விசாரிக்க நீதிபதி சம்பத் அபேகோன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனடிப்படையில் வழக்கு விசாரணை நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்