பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று(16) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(17) பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய கடவுச்சீட்டு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பிணை நிபந்தனையை நிறைவேற்றாத காரணத்தால் அவரது பிணை மறுக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Rishma