(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு ஆதரவு கோரி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 10 பேர் அடங்கலாக கையெழுத்திட்டு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய நாடுகள் இலங்கையினை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் முன்னிற்க ஜெனீவாவில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவ அதிகாரிகளுக்கு அவசரமாக ஆலோசனைகளை வழங்குமாறும் மேலும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
