பதிவு செய்யப்பட்ட கட்சிகளது செயலாளர்கள் சகலருக்கும் நாளை(29) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த இந்த கலந்துரையாடல் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்தும் தள்ளிப் போடப்பட்டு வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்தும், நிறைவடையவுள்ள மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்த உள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகின்றது