மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு சவால் விடுக்கிறார் நிமல் சிறிபால டி சில்வா..

மஹிந்த ராஜபக்‌ஷவின் எண்ணம் நிறைவேறாது எனவும் அவரால் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சவால் விட்டுள்ளார்.

நேற்று(05) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மஹிந்தவால் ஆட்சியை கவிழ்க்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் தற்போதையை ஆட்சியை கவிழ்க்க முடியாது. ஆனால் பிரதமர் பதவியை மட்டும் மாற்ற முடியும். என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.