மஹேலவின் கருத்துக்கு மேத்யூஸ் இடமிருந்து பதிலடி

(FASTGOSSIP | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன தான் தொடர்புடைய சில காரணங்களை முன்வைத்துள்ளதை தான் எதிர்ப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

ஏஞ்சலோ மேத்யூஸ் கிரிக்கெட் அரசியலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹேல தெரிவித்த கருத்துத் தொடர்பில் மேத்யூஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

” எல்லோருக்கும் தனக்கென ஒரு நிலைப்பாடு உண்டு. அது மஹேலவுக்கும் உண்டு. அவரது கருத்தினால் நான் ஆச்சரியமடைந்தேன். அதனை தான் எதிர்க்கிறேன். இப்போது எனது முழுமையான அவதானம் உலகக் கிண்ணமாகும்.நான் மஹேலவிடம் கூறுகிறேன் எமக்கு அவரது அனுபத்தினால் உதவுமாறு.. இச்சந்தர்ப்பத்தில் அது நமக்கு பெரும் உதவியாகும்…”