மாகாண சபைத்தேர்தல்கள் ஒத்திவைப்பதற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி  நீதிமன்றம் செல்கின்றது

இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்ஹ  சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடைபெற வேண்டும் எனவும், தேர்தல் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட பின்னரே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஒரு முன்யோசனையை அமைச்சரவை பதிரம்மூலம் சமர்ப்பித்திருந்தார். அமைச்சரை இதற்கான அனுமதியை  நேற்று வழங்கியது.
இதை அறிந்த கூட்டு எதிரணியினர் தேர்தல் ஆணைய தலைவர் மகிந்த தேசப்பிரியாவிடம் மாகாண சபை தேர்தல்கள் பின்போடப்படின் அவற்றிற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் முன்னால் அமைச்சர்    G.L.பீரிஸ் இந்த விடயம் தொடர்பாக கூட்டு எதிரணியின் சார்பில் நீதிமன்றில் ஆஜாராக பிரபல ஜனதிபதி சட்டத்தரணி ரொமேஷ் .D. சில்வாவை ஏற்பாடு செய்துள்ளார்.