மாங்குளம் – பழைய முருகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்பட 04 பேர் உயிரிழந்துள்ளதோடு, சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கோளாறு ஏற்பட்ட நிலையில், பழைய முருகண்டிப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பார ஊர்தியில், அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கயஸ் வாகனம் மோதியதால் குறித்த இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
#reeshma