(FASTNEWS|COLOMBO) வெளிப்படையான புத்தக பைகளை மாத்திரம் எடுத்து வருமாறு மாணவர்களுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் கேகாலை மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தில் பாடசாலை ஒன்றில் நேற்று வருகை தந்த மாணவர்களில் வெளிப்படையான புத்தக பை இல்லாத மாணவர்களை புத்தகங்களை கையில் எடுத்து செல்லுமாறு அதன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்
இந்த சம்பவம் தொடர்பாக விசாரனை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.