மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

(FASTNEWS | COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் வியாபாரிகளை இனங்கண்டு கைது செய்ய பொலிசாருடன் விசேட வேலைத் திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக போதைத் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் இடையே விசேடமாக தரம் 07 முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களை இலக்காகக் கொண்டு குறித்த போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளதாகவும், குறித்த செயலணியின் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.