மாத்தறை – ஊருபொக்க ஹூலங்கந்தை – தம்பஹல பகுதியில் இன்று(22) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 44 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பஸ்கொட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், மற்றுமொரு மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் ஹீகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.