மாத்தறை – எலவேல்ல வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 19 வயதான பாடசாலை மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(26) சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த பின்னர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.