மாத்தறை – பெலியத்த புகையிரத சேவை இன்று(08) முதல்…

(FASTNEWS|COLOMBO) மாத்தறை – பெலியத்த புகையிரத பாதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(08) திறந்து வைக்கப்படவுள்ளது.

இதன்படி, குறித்த புகையிரத பாதையில் 7 புகையிரதங்கள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன், அவற்றுள் ஒரு புகையிரதம் காலி வரை பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், இரண்டு புகையிரதங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.