(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆங்கில பிரத்தியேக வகுப்புக்கு சென்ற மாணவிகள் இருவரை துஷ்பிரயோகத்தில் உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் பாணந்துறை, குருஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 16 திகதி கைதான ஆசிரியர் வீட்டில் குறித்த மாணவிகள் இரண்டு மணித்தியாலங்கள் பிரத்தியேக ஆங்கில வகுப்புக்கு சென்றதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர், தமது மாமியரின் வீட்டில் ஆங்கில பாடம் நடத்தி வந்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியர் 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.