மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்திட்டங்கள் இன்று முதல் ஆரம்பம்

இலங்கையிலுள்ள 18 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு செயற்பாடுகள் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு, கண்டி வத்தேகம சமூக சேவைகள் திணைக்கள தொழிற்கல்வி மத்திய நிலையத்தில் சமூக சேவைகள் பணிப்பாளர் தலைமையில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.